Tuesday, July 28, 2015

கலைமகளோர் கைம்பெண்

வெள்ளையுடை அணிவாள் வெறுமையிற் அமர்ந்திருப்பாள்
அள்ளும் பொருட்செல்வம் அண்டாத கன்றிருப்பாள்
விண்ணவனின் துணையாவாள் வார்த்தை பேசாள்
வெண்ணிலவை வரச் செய்த வல்லீ அபிராமி கடைக்
கண்ணியைந்த கவிஞருக்கே கலைமகளோர் கைம்பெண்

விளக்கம்:

வெண்ணிலவை இருண்மதி  (அமாவாசை) அன்று வரச் செய்த அபிராமவல்லீயின் கடைக்கண் பெற்ற கவிஞருக்குக்

கலைமகளோர் கைம்பெண் (விதவை) ஆவாள்.

எங்கனம்?

கலைமகள் கைம்பெண் இருவருமே வெள்ளையுடை தரிப்பவர்கள்.

கலைமகள் அண்டங்களைக் கடந்த வெறுமையில் சுத்த அறிவாய் வீற்றிருபாள்.
கைம்பெண் அர்த்தமில்லாத பழைய சாத்திரதுக்குக் கட்டுப்பட்டு மூலையில் வெறுமையில் வீற்றிருபாள்.

கலைமகள் பொருட்செல்வம் மிகுந்த இடத்தில் அகன்றிருப்பாள்.
கைம்பெண் பொருட்செல்வத்தின் குறியெல்லாம் தவிர்த்திருப்பாள்.

கலைமகள் விண்ணவனான் பிரம்மனின் துணைவியானாள்.
கைம்பெண் இறந்து விண்ணவனான தன் கணவனின் துணைவியானாள்.

கலைமகள் மோனத்தே இருப்பாள்.
கைம்பெண் கணவனை இழந்த துயரில் வார்த்தை பேசாதிருப்பாள்.

No comments: