Thursday, October 26, 2006

தீ உண்டு

தீயொன்று உண்டே
வேனில் மலரின் உள்ளிருந்து சிரிக்கும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
காய்ந்த சருகெடுத்து உயிருடன் உண்ணும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
ஆலயத்திருந்து அமைதியில் அமரும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
அடுப்பினில் துவண்டு உழைப்பினில் உருகும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
காரணமொன்று இன்றி கானகம் கொல்லும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
அன்னமோராயிரம் உயிர்க்கிட்டு அகிலமளிக்கும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
காதலில் கனிந்து கண்ணில் ஒளிரும்
தீயொன்று உண்டே

தீயொன்று உண்டே
கண்ணில் தோன்றி காமத்தில் எரியும்
தீயொன்று உண்டே

முடிவில்,

தீயென்று ஒன்று இங்கு உண்டே.

Wednesday, October 18, 2006

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்...

இது ஒரு புது விடியல்!