Saturday, September 05, 2015

வினா விடை

கவிஞன்:

பகலெல்லாம் வியர்க்க வினை பல செய்து
பணி பல புரிந்து மாலை மழையில்
நனி நீராடி நறுமலர் சூடி
மின்விழிப் பூத்துக் காத்திருக்கும் நிலமே

உன் காதலன் யார்?
இரவா? நிலவா?
அமுதா? தமிழா ?
கவியா? துயிலா?

காதல் களித்துக் கலவி பயின்று
நீ கண்ட கனவுகள் தான் என்ன?
எழுதிய கவிகள் யாது?

நிலம்:

காதல் ஒன்றே நானும் கொண்டேன்
காதலர் பலராம்எம்ம்மார்பினிலே எம்மார்பினிலே
காதல் உயிரே காதலர் உடம்பே
காதலர் மாறினும் காதல் ஒன்றே

இரவும் நிலமும் அமுதும் தமிழும்
துயிலிற் நான் கண்ட கனவின் உருவே
துயிலும் விழிப்பும் கனவும் கவியும்
காதல் என்னும் கடவுளின் களியே

பகலினிற் உழைத்தல் மாலை மழையில் நனைதல்
மலர் அணி அணிதல் மாலையிற் களித்தல்
இரவினில் மரித்தல் இறுதியில் எரிதல்
இன்னும் நிகழ்தல் எல்லாம் இங்கு
காதல் காதல் காதல் ஒன்றே

No comments: