Sunday, September 30, 2012

இறைவன் எனக்கோர் ஈசல்


I shall die again and again to know that life is inexhaustible. - Stray flowers, Tagore.

இறைவன் எனக்கோர் ஈசல்.
எல்லாம் வல்ல
இறைவன் எனக்கோர் ஈசல்.

எல்லாம் வல்ல இறைவன்
எனக்கு,

ஒரு நொடி பிறந்து
ஒளியிடம் பறந்து
மறு நொடி இறந்து
மறுபடி பிறக்கும்

ஈசல்.


எல்லாம் வல்ல இறைவன்
என் தலையில்

ஒரு நொடி பிறந்து
பாட்டாய் மலர்ந்து
மறு நொடி மறந்து
மறுபடி பிறக்கும்

ஈசல்.

எல்லாம் வல்ல இறைவன்

மீண்டும் மிண்டும்
ஒரு நொடி பிறந்து
ஒரு நொடி படர்ந்து
மறு நொடி இறந்து
பிறப்பைக் கடந்து
இறப்பை உணர்ந்து
ஒளியைக் கலந்த

ஈசல்.


எல்லாம் வல்ல
இறைவன் எனக்கோர் ஈசல்.


இறைவன் எனக்கோர் ஈசல்.