Saturday, September 05, 2015

நிந்தை

முன்னொரு காலத்தில் எழுதிய கவிதைகள் இவை. தாகூரின் "Stray birds"ஐத் தழுவியவை. அப்பொழுது அவளோடு எனக்கு நெருக்கம் அதிகம். எனவே உரிமையோடு விளையாடியதால் வந்த "வினை".

பி.கு: பாடல்களின் பொருள் புரியாவிட்டால் பதிவில் குறிப்பிடவும். விளக்கம் தருவேன். 

நள்ளிரவின் இருட்டில்
தோடு கழற்றிக் கேட்டாள்
நிலவு தெரிகிறதா?

---


வேட்டை முடித்து தோலுரித்து
வீடு வந்தவனைக் கண்டு
பிள்ளையைக் கொல்வீரோ என அஞ்சினாள்

---


காலால் காதைத் தொட்டான்
கொல் எனச் சிரித்து சொன்னாள் வெற்றி
எனதே அரை மனிதா

---


கூந்தல் முகர்ந்து
தள்ளிச் சென்றவனைக் கேட்டாள்
தாழம்பூ வாசமோ?

---


பாதம் பற்றி
மெட்டி இடுகையில்
நாக்கை நீட்டினாள்

---


நிலவில் கள் குடித்து
அவனிடம் சொன்னாள்
நான் பிடித்த ஆளுக்கு மூன்று கண்

---


மாங்கனியே என்றான் ஆசையோடு
பதறி எழுந்தாள்
பிள்ளை கோபிப்பான் என்று

---


கையில் நெறுப்பள்ளிக் கொடுத்தாள்
தலையெல்லாம் ஈரம்
பனி வேறு பொழிகிறது

---


குரல்வளையைக் கையால்
இறுக்கிப் பிடித்தாள்
கொலையும் செய்வாள் பத்தினி

---


நகங் கிள்ளாது இருப்பவளிடம்
சொன்னான் தமையன் மேல் பரிவோ?

---


வண்டியேறி வந்தவளைப் பார்த்து
எச்சரித்தான் மாடு மிரளப் போகிறது

---

மகிழ்வுடன் மணம் புரிய சம்ம்மதித்தாள் 
மாமியார் தொல்லை இல்லை

---


அவன் அவளை நோக்க 
கொங்கை இடை நின்ற 
ஆரம் கசன்றது 

---


காதல் இரவினில் 
அவன் திலகம் சூடினான் 
அவள் சாம்பலணிந்தாள்

---

No comments: