Tuesday, September 08, 2015

மடமை

மடுத்து மாட்டின் மடி சுரந்த பாலை
தடுத்துக் கன்றிர்க்குக் கிட்டாமல் செய்து
குடத்தில் நிரப்பிக் கல்லுக்கு இடல் - முறையே
நடந்து நாற்றிற்குத் தான் செல்லும் நீரை
கடத்திக் கனவினிலே கனவாய்க் கண்ட
படத்தில் வரைந்த பயிருக்கிடல்

No comments: