Monday, June 09, 2008

பொன் - பகுதி முன்று

தளையனைத்தும் உடைந்தது
தங்கம் தரணி மக்கள் முகமெங்கும் மலர்ந்தது
வினையும் பயனும் இன்பத்தே இணைந்தன
தென்றல் தேர் ஏறி வலம் வந்தாள்
கலகம் கலக்கம் குழப்பம் இல்லா
பரசிவக் குளத்தில்
பராசக்தி கல்லொன்று எறிந்தாள்
படைப்பு பிறந்தது

அழகுக் கடல் ஆசை அலையால்
ஆயிரம் முறை சிவன் நெஞ்சில் அறைந்தாள்
மீண்டும் மீண்டும் தோள் தழுவி
கலவி கற்று களித்தாள்

புள்ளெல்லாம் பயன் பெற்று
பிறவி நீங்கி
பொன்னம்பல கூட்டிற்கெய்தின
உலகெல்லாம் உய்வுற்று
காரணம் காரியம் கருத்தொன்றிலாத
இன்ப சோதியாய் மலர்ந்தது

உள்ளப் பாற்கடலில்
உறக்க நாக சயனத்தில்
உரைக்க முடியா சோதியவன்
அழகு
இன்பம்
ஆசை
என்னும் அலையோசையில்
மயங்கி
மன்மதக் கனவில் முழ்கி
காரணம் அழிந்த குருடனாய்
குறிக்கோள் கெட்ட செவிடனாய்
முயற்சியற்ற மூடனாய்
எம்முள் எரிந்தான்

1 comment:

Anonymous said...

!Simply splendid, Agni. The intense beauty of all the stanzas is only dimmed by the wise philosophy in the last four lines.

I truly enjoyed this latest in the series immensely. Thank you.