Wednesday, June 04, 2008

பொன் - பகுதி இரண்டு

விசும்பின் விளிம்பில்
உருண்டு
திரண்டு
விம்மி
களியாய் காதலாய் கரும்பாய்
வழியாய் வேட்கையாய் வேதனையாய்
வனப்பாய் அழகாய் உருவாய்
நின்ற அத்துளி
ஐயத்தே ஒரு நொடி ஊசல் கொண்டது
மறு நொடி மனம் தெளிந்தது

விடுக்கென்று பாசம் விட்டு
பந்தம் அற்று
துன்பம் கொன்று
ஆசை வென்று
காமம் கடந்து
விண்ணின் வெளியில் வெடித்துச் சிதறி
மாலை
எனும் மதன ரூபமாய் பிறந்த்ததே
அம்மாவோ!
அமுதம் எங்கும் வழிந்ததே!

1 comment:

Anonymous said...

The sheer power and beauty in this second part is overwhelming, Agni. Simply divine.