Monday, June 02, 2008

பொன் - பகுதி ஒன்று

ஆகாயம்
வெட்ட வெளிக்கெல்லாம் வெளி நின்ற வேள்விக் களம்
அண்ணாந்து பார்த்தால் தெரியும் ஆனந்தப் பிரவாகம்
கண் முடிப் பார்த்தால் தெரியும் கற்பக விருட்சம்
மோனம் எனும் பாலை முடிவின்றிச் சுரக்கும் காமதேனுவின் மடி இழுக்கின்ற முச்சின் பிறப்பிடம்
அண்டத்தை ஒன்றிப் படரும் மதன மல்லிகைக் கொடி

இவ்வானில் இங்கே ஒரு முலையில்
முளைத்ததொரு தங்கத் துளி
பரமனவன் பட்டறையில்
பதமாய் உருக்கி பாவைச் சிலையாய் வடிக்க வைத்த
பசும் பொன் திரளில்
திமிரி ததும்பி தப்பிய துளி
மிதமான ஒளி
கண்ணை மயக்கும் கதகதப்பு
தனத்தின் வனப்பு
என
கன்னியாய் காட்டு தேவதையாய்
காமக் களஞ்சியமாய்த் தோன்றிய
கதிரின் துளி

பகல் என்னும் தந்தையின் கைபற்றி
பருவ வெறியோடு நிற்கும்
இரவுக் காதலனை நோக்கித்
தடுமாறி நிற்கும் துளி
பந்தமும் பாசமும் பற்றி
ஆசையும் களியும் கண்டு
அன்னலிற் தவிக்கும் மானிடத் துளி

1 comment:

Anonymous said...

Divinely inspired. Very beautiful poem.