Wednesday, December 31, 2014

எலிப் பாட்டு




எலியே எலியே எழில்மிகு எலியே
    எங்கள் வீட்டின் அஞ்சாப் புலியே 
நெளி வால் ஆட நள்ளிரவதனில்
    குடுகுடுவெனவே ஓடும் எலியே 

குருகுருவேன்றே குடையும் கண்ணால் 
    மூங்கில் படியின் கைப்பிடி வழியே 
துருதுருவென்றே துருவித் தேடி 
    தாவிக் குதிக்கும் தந்திர எலியே

சரசரவெனவே சன்னல் விளிம்பில்
    சடுதியில் ஓடி வெளியே தாவி
கரகரவென்னும் காரைப் புல்லில் 
    நொறுக்குத்தீனி தின்னும் எலியே 

துரத்தும் நாய்கள் ஐயோ பாம்பு 
    திடீரென இரவில் பளிச்சிட்டும் விளக்கு
பறக்கும் ஆந்தை பாயும் பருந்து
    எதற்கும் அஞ்சா துணிச்சல் எலியே 

எலியே எலியே எழில்மிகு எலியே
    எங்கள் வீட்டின் அஞ்சாப் புலியே 
எலியே எங்கள் தோழன் நீயே
    என்றும் எம்முடன் சேர்ந்திருப்பாயே 

No comments: