Wednesday, December 31, 2014

வலஞ்சுழிக் காளீ




ஆளில்லாக்காட்டில் ஆகா! காளீ!
    அச்சமெல்லாம் தீர்த்து வைக்கும் ஆத்தா சூலி!
காளி மகா காளி ஓங்காரி நீலீ!
    கண்ணொளியில் பகை விரட்டும் வேப்பிலைக்காரி!

எட்டுக்கையால் காத்து நிற்கும் எழில்மிகு காளீ!
    எங்கள் எண்ணமெல்லாம் நிறைவேற்றும் மந்திரக்காரி
கட்ட்ப்போட்ட மாயையையெல்லாம் பட்டென நொடியில்
    வெட்டிப் போடும் வீரமான தந்திரக்காரி

ராகாராசன் சேவை செய்த ராஜமாகாளீ!
    ராத்திரியின் ராணி இவள் ரசம்தரும் காளீ!
ஆசையோடு அனைத்துக் கொள்ளும் பைத்தியக்காரி!
    வாழ வைக்கும் எங்க தாயீ! வலஞ்சுழிக் காளீ!

அம்மா வலஞ்சுழிக் காளீ! ஆத்தா அடைக்கலம் தாயீ!
போற்றி போற்றி எந்தாயீ! போற்றி போற்றி மாகாளீ!

No comments: