Thursday, January 15, 2015

போகிப் பாடல்

புகையெனப் போன்மின் பழைமைகாள்
    தீயிற்ப் பட்டழிந்து போன்மின்
பகை நீர் எமக்கே பரிதிமுன் பனியே
    போல் பற்றழிந்து போன்மின்
வகை வகையே வாழ்வு புதுமை செய்வோம்
    படைப்பு செய்வோம் காண்மின்

அரைக் கணமும் நினையோம் உம்மை
    அடியோடு மறைந்து போன்மின்
நிறை நிலவு எந்தன் சிந்தை
    நித்தம் நவமெனச் சுடர் செய்வோம்
மறை செய்வோம் மனம் வளர்ப்போம்
    மதியினிலே தீ வளர்ப்போம் எனவே (புகையெனப்...)

விழியிரண்டில் கதிருண்டு காப்புண்டு
    வாயதனில் தமிழுண்டு கோலுண்டு
வழியதனைச் செம்மை செய்ய
    வாள் வீசும் காளியுண்டு
கலி தீர்த்தோம் களையறுத்தோம்
    களம் வென்றோம் புறம் காட்டி (புகையெனப்...)
 

No comments: