Saturday, May 03, 2014

ஏன்


இறைவன் ஒருவன் நானறிவேன்
மறைவாய் உரைவதவன் என் மனத்தே
மறையும் ஒன்றே நானுரைப்பேன்
நிறைவாய் நின்றதோர் அமைதியிலே

ஒன்றே தொழுகை நானும் புரிவேன்
என்றும் வாழும் வாழ்க்கையதுவே
ஒன்றேயமுதம் நான் பெரும் பரிசு
நன்றாய்ப் பொழியும் கவி  என்னும்தேன்

இறைவன் ஒருவன் ஒன்றாயிருக்க
அறியாக் கல்லும் மலரும் பெயர்த்து
முறையாய்க் கோவில் தொழுகை செய்து
பிரிப்பேன் ஏனோ என்னிடம் அவனை

ஆங்கிலத்தில் - http://agnibarathi.blogspot.com/2014/05/why.html

No comments: