
தவழும் தென்றலடா நான்
தரணி எங்கும் வாசமாகும்
நடக்கும் நதியடா நான்
நிலம் எல்லாம் என்னால் வளம்
காலைக் கதிரடா நான்
கண் விழித்தால் உலகுவிடியும்
சிரிக்கும் நிலவடா நான்
சிந்தையும் குளிர்ந்துவிடும் என்னொளியில்
தெரிக்கும் மழையடா நான்
தொட்ட இடமெல்லாம் தூய்மையாம்
மகிழும் மலரடா நான்
மலர்ந்தால் அணைத்தும் ஒளி
பரந்த விண்ணடா நான்
விரிந்தால் வையம் அடங்கும்
எரியும் நெருப்படா நான்
வீறு கொண்டால் எல்லாம் அழியும்
பாயும் புலியடா நான்
குரல் கொடுத்தால் குலை நடுங்கும்
சீறும் பாம்படா நான்
சினம் கொண்டால் படை நடங்கும்
பெருகும் வெள்ளமடா நான்
செறுக்கடைந்தால் தடையெல்லாம் தூள்
சுழலும் புயலடா நான்
துணிவு கொண்டால் உலகம் அஞ்சும்
நிறையும் இறையடா நான்
விளையாடினால் பிரபஞ்சம்