Monday, October 29, 2012

மூன்று அக ஹைக்கூகள்


திணை - முல்லை

துறை - பிரிவின்கண் வருந்தி அது குறித்து மறைவாக தலைவி தலைவனுக்கு கூறியது

காத்திருப்பேன் காலமுண்டு
இவ்வந்தியில் துணைவர் மூன்று
கார்மேகம் கருமுல்லை கொஞ்சம் தனிமை

திணை - குறிஞ்சி

துறை - புணர்தல் வேண்டி பலமுறை நாடிய தலைவனிடம் தலைவியின் பதிலை தோழி கூறியது

கார்மேகம் தழுவும் கொல்லிமலை தனிலே
காரிருள் பொழியும் குளிரருவி அருகே
குறிஞ்சிப் பூ பறிக்கக் சென்றாள்

திணை - பாலை

துறை - பணி முடிந்து மனை திரும்பும் தலைவன் வழியின் இயல்பு கண்டு வருந்தி தலைவிக்கு அனுப்பிய சிற்றோலை

மரமில்லா நெடுஞ்சாலை
மனமெல்லாம் வெறும் சோலை
எரும்பான நான் பிழைத்தால் மனை சேர்வேன்

விளக்கம் இங்கே

No comments: