Thursday, April 02, 2015

முலையமுது

கனியோ தீரும் மலரோ வாடும் - செங்
கதிரோ சாயும் நள்ளிரவும் விடியும்
பிணியும் போகும் பாழுயிரும் அடங்கும் 

குறுவாய் விரிவிழிக் களியிடைப் பெண்ணே உன் 
முகில்தொடுமுலையின் மென்முனை கூடி

கண்டதும் கேட்டதும் உண்டதும் உயிர்த்ததும்
உற்றதும் அறிவினில் அமுதென வாழும்