Wednesday, May 21, 2014

நாய்ச் சண்டை

நிலமுனதே தூனாகி நின்ற கல்லுனதே
பலவாய்க் கொன்ற மரமுன் சேயே காட்டின்
களத்தில் கொன்று விரட்டிய விலங்கும் உன் அன்பே
அங்கே

பலவாய் ஆலயம் செய்து பகை கொண்டு கொலைக்
களமாய் நிலம் செய்து மாக்கள் தாம் மாய்ந்தனரே

பிறை சூடும் பிச்சைப் பெருமானே பித்தனே
இறையறுக்கும் புலையன் இருதுண்டு எரிய
குரைக்கும் நாய்கள் தாம் சண்டையிட்டால்
உறைக்கவோர் முறையேது? முடிவேது?

English - http://agnibarathi.blogspot.com/2014/05/dogs-quarrel.html


Saturday, May 03, 2014

ஏன்


இறைவன் ஒருவன் நானறிவேன்
மறைவாய் உரைவதவன் என் மனத்தே
மறையும் ஒன்றே நானுரைப்பேன்
நிறைவாய் நின்றதோர் அமைதியிலே

ஒன்றே தொழுகை நானும் புரிவேன்
என்றும் வாழும் வாழ்க்கையதுவே
ஒன்றேயமுதம் நான் பெரும் பரிசு
நன்றாய்ப் பொழியும் கவி  என்னும்தேன்

இறைவன் ஒருவன் ஒன்றாயிருக்க
அறியாக் கல்லும் மலரும் பெயர்த்து
முறையாய்க் கோவில் தொழுகை செய்து
பிரிப்பேன் ஏனோ என்னிடம் அவனை

ஆங்கிலத்தில் - http://agnibarathi.blogspot.com/2014/05/why.html