Monday, April 28, 2014

என்னவர்


நீரில் நீந்தும் மீன் என் உறவே
நானும் கருவில் நீந்தியதாலே

ஊறும் தவழும் உயிர் யாவும் உறவே
மண் மேல் நானும் ஊறியதாலே

நாற்கால் நடக்கும் விலங்கெல்லாம் நட்பே
தவழ்ந்து தவழ்ந்து தேடியக் காலே

இருகால் நாரை குரங்கும் எமதே
இன்றும் நான்புவியில் நடப்பதாலே

நொடியில் இறக்கும் ஈசலும் உறவே
என் இமையிரண்டும் இமைப்பதாலே

பறந்து திரியும் புள்ளெல்லாம் தோழர்
தமிழொடு என்மனம் பறப்பதாலே

கதிரைக் குடிக்கும் செடிகொடி உறவே
தவத்தில் நான் கதிர் அருந்தியதாலே

தவத்தில் நிற்கும் நெடுமரம் கேளிர்
என்கதை தவமே கனியும் பாரீர்

நீள்கடல் மலைநதி யாவும் என்கூட்டம்
என்றும் என்கவி இசைப்பதாலே

எல்லாம் எல்லாம் எல்லாம் என் உறவே - இனியும்
என்தாய் என்சேய் என்னவர் என்ற
எண்ணமுமேதே?

In English - http://agnibarathi.blogspot.hk/2014/04/my-clan.html