Tuesday, August 20, 2013

காயத்ரி ஜபம்


இடக்கண் திறந்து இறந்த காலம் நோக்கி
இயம்புவன் அவளை நினைவாய் நினைத்து

வலக்கண் திறந்து வாழும் காலம் நோக்கி
வணங்குவன் அவளை அறிவாய் அறிந்து

நடுக்கண் திறந்து நாளை நோக்கி
நாடுவன் அவளை கற்பனை அமைத்து

முக்கண் திறந்து முடிவில்லாக் காலத்திணைந்த
மூவுலகும் கண்டு துதிப்பேன் அவளை சக்திஎனப் பாடி

முக்கண் மூடி மனத்தேயொன்றி முக்காலம் மறைந்து
எக்காலமும் ஏற்றுவன் அவளை நான் எனும் பெயரால்

In English - http://agnibarathi.blogspot.in/2013/08/gayatri-japam.html