Tuesday, April 22, 2008

கேள்வியின் நாயகியே

கண்மணியே காதலியே காத்திருக்கும் கவிக்குயிலே
கண்ணினிலே கேள்விதனை கூட்டி வைக்கும் காரிகையே
என்னைவிட்டு எங்கெய்தினாய் யாதியற்றினாய் என்று
கண்ணினிலே கேள்விதனை பூட்டி வைக்கும் பேரழகே

கேள்!

பொன்னமுதாய் பொழிந்திடும் ஓர் தனலைக் கண்டேன்
விண்ணதனைத் தழுவி நிற்கும் விருட்சம் கண்டேன்
எண்ணமெல்லாம் ஏற்றம் செய்யும் ஒளியக் கண்டேன்
கன்னமிரண்டும் சிவந்த வான் பெண்ணைக் கண்டேன்

கூட்டிற்கே விரைந்த்தோடும் சிட்டுக் குருவிகள்
கூட்டு சேர்ந்த்தே விளையாடும் சுட்டிச் சிறுமிகள்
தீட்டுகின்ற கதிரால் சிவந்த குட்டி அருவிகள்
காட்டுகின்ற மாலைப் பொழுதில் எல்லாம் கண்டேன்

விந்தை ஓராயிரம் வானில் கண்டேன்
சிந்தை சேர்ந்திடும் சத்தியம் கண்டேன்
முந்தைக் கவிஞன் மூத்த கம்பன் உவமை
இந்த மாலைப் பொழுதில் மலரக் கண்டேன்

காணுகின்ற பொருளிலெல்லாம் பெண்ணழகே என்னவளே
தோன்றுகின்ற காட்சியொன்றே என்றெண்ணித் தெளிந்த்தேன்
நாண்கின்ற வான்மகளை மீண்டும் கண்டேன்
தேனிறங்கும் நின்னழகை நாடி ஓடி வந்த்தேன்